என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கோனியம்மன் கோவில்
நீங்கள் தேடியது "கோனியம்மன் கோவில்"
கோவை கோனியம்மன் கோவிலில் தேர்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது கோனியம்மன் கோவில். இக் கோவில் மாசி திருத் தேர்திருவிழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங் கியது. அன்று விநாயகர் திருவீதி உலா நடை பெற்றது.
இன்று (செவ்வாய் கிழமை) இரவு 7.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு அக்னிச்சாட்டு நடக்கிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சரவணம் பட்டி கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் அருளுரை வழங்குகிறார்கள். இரவு 8 மணிக்கு அம்மன் திரு வீதி உலா நடைபெறுகிறது.
வருகிற 1-ந் தேதி திருவிளக்கு வழிபாடும், 5-ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 6-ந் தேதி (புதன் கிழமை)தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், காலை 5 மணிக்கு அம்மன் திருத் தேருக்கு எழுந்த ருளல், பகல் 2 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
தேரை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், அமைச் சர்கள் எஸ்.பி. வேலுமணி, சேவூர் ராமச் சந்திரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்கள்.
இதில் ஆதீனங்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். வருகிற 8-ந் தேதி தெப்ப திருவிழா, 9-ந் தேதி தீர்த்தவாரி கொடியிறக்கம், 11-ந் தேதி வசந்த விழா நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கைலாஷ், தக்கார், உதவி ஆணையர் விமலா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
இன்று (செவ்வாய் கிழமை) இரவு 7.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு அக்னிச்சாட்டு நடக்கிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சரவணம் பட்டி கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் அருளுரை வழங்குகிறார்கள். இரவு 8 மணிக்கு அம்மன் திரு வீதி உலா நடைபெறுகிறது.
வருகிற 1-ந் தேதி திருவிளக்கு வழிபாடும், 5-ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 6-ந் தேதி (புதன் கிழமை)தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், காலை 5 மணிக்கு அம்மன் திருத் தேருக்கு எழுந்த ருளல், பகல் 2 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
தேரை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், அமைச் சர்கள் எஸ்.பி. வேலுமணி, சேவூர் ராமச் சந்திரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்கள்.
இதில் ஆதீனங்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். வருகிற 8-ந் தேதி தெப்ப திருவிழா, 9-ந் தேதி தீர்த்தவாரி கொடியிறக்கம், 11-ந் தேதி வசந்த விழா நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கைலாஷ், தக்கார், உதவி ஆணையர் விமலா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X